"எவன் ஒருவன் தாய் தந்தையருக்கு தேவையானவற்றை கொடுத்து மனம் நோகாமல் வைத்திருக்கனோ அவன் தினம் தினம் கங்கையில் குளித்தற்கு சமம். ஆக தினம் தினம் பாவத்தை கழுவி புண்ணியத்தை அடைந்தவன். ஆகையால் இந்த உலகத்தில் தாய் தந்தையருக்கு நிகரான கடவுள் உலகில் இல்லை. தாய் தந்தையாரை கவனிக்காமல் எந்த கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தாலும் என்ன தானம் செய்தாலும் புண்ணியம் கிடைக்காது"

Monday, November 14, 2011

பயனுள்ள பதிவு...

நம் முன்னோர்களின் வாக்குபடி "உடல் வளர்தேன்னே உயிர் வளர்தேன்னே" என்ற திருமூலர் வாக்கு உண்மை. நம் உடலில் கடிகாரம் போல் காலை 03.00 மணி முதல் இரவு 02.59 வரை இரண்டு மணிநேரத்துக்கு ஒரு உடல் உறுப்பு இயங்குவதாக இந்தியா (சித்தா,ஆயுர்வேதம்) மற்றும் சீன மருத்துவ முறைகள் கூறுகின்றன ...... அதை இங்கு பார்ப்போம் .....

காலை 03.00 மணி முதல் 05.00 வரை: நுரையீரல்
புவி ஈர்ப்பு விசை மிகவும் குறைவு (மனம் மிகவும் அமைதியாக இருக்கும்) ஆகையால் தியானம், இறை வழிபாடு, குழந்தைகள் படிப்புக்கு ஏற்ற நேரம்.
குறிப்பு : இந்த நேரத்தில் ஆஸ்துமா உள்ளவர்கள் துங்க முடியாது. இவர்கள் சரியாக 03.00 மணிக்கு எழுந்து 05.00 மணிவரை இரும்மல் தொல்லியல் அவதியுறுவர்.

அதி காலை 05.00 மணி முதல் 07.00 வரை: பெருங்குடல்
இந்த நேரத்தில் காலை கடன் செய்யவேண்டும்.

காலை 07.00 மணி முதல் 09.00 வரை :இரைப்பை
இந்த நேரத்தில் காலை உணவை முடித்து இருக்க வேண்டும்.

காலை 09.00 மணி முதல் 11.00 வரை: மண்ணீரல்
நாம் சாப்பிட்ட உணவை மற்ற உறுப்புகளுக்கு பிரித்து கொடுக்கும் நேரம். இந்த வேலை நடந்தால் தான் சுறுசுறுப்பாக இருக்க முடியும். தடைப்பட்டால் அன்று முழுவது சோம்பலாக இருப்பதை உணரலாம். ஆகையால் ......
குறிப்பு : இந்த நேரத்தில் அமுதம் (சாகாவரம் கொடுக்கும் உணவு) கொடுத்தாலும் உண்ண கூடாது என்றனர் நம் முன்னோர்கள். ஆகையால் இந்த நேரத்தில் தண்ணீர் கூட குடிக்கக்கூடாதென்று சொன்னார்கள்.

பகல் 11.00 மணி முதல் 01.00 வரை: இதயம்
இந்த நேரத்தில் தூங்க கூடாது.
குறிப்பு : இந்த நேரத்தில் தூங்கினால் இதய சம்பந்தப் பிரச்சனைகள் வரும்.

மதியம் 01.00 மணி முதல் 03.00 வரை: சிறுகுடல்
இந்த நேரத்தில் மதிய உணவை முடித்திருக்க வேண்டும்.

மாலை 03.00 மணி முதல் 05.00 வரை: சிறுநீரகப்பை
இந்த நேரத்தில் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். ஜலம் கழிக்கவேண்டும்.
குறிப்பு : தினமும் ஏதாவது பழரசம் குடிக்க நினைத்தால் இந்த நேரத்தில் அதை குடிக்க வேண்டும். அதன் பலன் 100% உடம்பில் சேரும்.

மாலை 05.00 மணி முதல் 07.00 வரை: சிறுநீரகம்
குழந்தைகளை விளையாடவும் அல்லது நடைப் பயிற்சி செய்யவும் சிறந்த நேரம். நம் வேர்வை வெளியேற வேண்டும் .

இரவு 07.00 மணி முதல் 09.00 வரை: இருதய உறை
இரவு உணவு சாப்பிடலாம், தியானம் செய்யலாம்.
குறிப்பு : இந்த நேரத்தில் பாலோ, பால் சார்ந்த உணவுகளும் சாப்பிட கூடாது.

இரவு 09.00 மணி முதல் 11.00 வரை: நாளமில்லா சுரப்பிகள்
ஆறுதல் தேடும் நேரம், அறிவுரைகளை ஏற்கும் நேரம் ஆகையால் குழந்தைகளுக்கு அறிவுரை கூற நினைத்தால் இந்த நேரத்தில் கூறினால் குழந்தைகள் (பெரியவர்களும்) கேட்பார்கள்.

இரவு 11.00 மணி முதல் 01.00 வரை: பித்தப்பை
இந்த நேரத்தில் அழ்ந்தத் தூக்கம் தேவை.
குறிப்பு : தூங்கவில்லை என்றால் அழகு, அறிவு, பலம் குறையும்.

இரவு 01.00 மணி முதல் 03.00 வரை: கல்லீரல்
இந்த நேரத்தில் அழ்ந்தத் தூக்கம் தேவை.

உடல் நலம் பெற உடற்பயிற்சி
மனநலம் பெற தியானப் பயிற்சி

உடல்+ உயிர் = மனம்

மனம் சரியாக இயங்கினால் எந்த ஒரு செயலிலும் வெற்றி உறுதி.

No comments:

Post a Comment