"எவன் ஒருவன் தாய் தந்தையருக்கு தேவையானவற்றை கொடுத்து மனம் நோகாமல் வைத்திருக்கனோ அவன் தினம் தினம் கங்கையில் குளித்தற்கு சமம். ஆக தினம் தினம் பாவத்தை கழுவி புண்ணியத்தை அடைந்தவன். ஆகையால் இந்த உலகத்தில் தாய் தந்தையருக்கு நிகரான கடவுள் உலகில் இல்லை. தாய் தந்தையாரை கவனிக்காமல் எந்த கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தாலும் என்ன தானம் செய்தாலும் புண்ணியம் கிடைக்காது"

Sunday, November 13, 2011

தனித்தீவாய் நான்....



விடிகாலையில்
சூரிய உதயம் பார்த்து
வருடங்களாயிற்று.

மொட்டை மாடியில்
நட்சத்திரதோடு விளையாடி
சில மாதங்களாயிற்று.

நண்பர்களோடு
அரட்டையடித்து
சில வாரங்களாயிற்று.

அவசர அவசரமாய் இயங்கி
தானாய் புலம்பி
தனித்தீவாய்
மாறிக்கொண்டிருக்கிறேன்.

பாவம் நான்
எனக்காய் இரக்கப்படுங்கள்.

கொஞ்சம் கொஞ்சமாய்
நரக வாசியாய்
மன்னிக்கவும்
நகரவாசியாய்
மாறிக்கொண்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment