
விடிகாலையில்
சூரிய உதயம் பார்த்து
வருடங்களாயிற்று.
மொட்டை மாடியில்
நட்சத்திரதோடு விளையாடி
சில மாதங்களாயிற்று.
நண்பர்களோடு
அரட்டையடித்து
சில வாரங்களாயிற்று.
அவசர அவசரமாய் இயங்கி
தானாய் புலம்பி
தனித்தீவாய்
மாறிக்கொண்டிருக்கிறேன்.
பாவம் நான்
எனக்காய் இரக்கப்படுங்கள்.
கொஞ்சம் கொஞ்சமாய்
நரக வாசியாய்
மன்னிக்கவும்
நகரவாசியாய்
மாறிக்கொண்டிருக்கிறேன்.
No comments:
Post a Comment