"எவன் ஒருவன் தாய் தந்தையருக்கு தேவையானவற்றை கொடுத்து மனம் நோகாமல் வைத்திருக்கனோ அவன் தினம் தினம் கங்கையில் குளித்தற்கு சமம். ஆக தினம் தினம் பாவத்தை கழுவி புண்ணியத்தை அடைந்தவன். ஆகையால் இந்த உலகத்தில் தாய் தந்தையருக்கு நிகரான கடவுள் உலகில் இல்லை. தாய் தந்தையாரை கவனிக்காமல் எந்த கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தாலும் என்ன தானம் செய்தாலும் புண்ணியம் கிடைக்காது"

Friday, December 2, 2011

வாழ்க்கையை அனுபவித்து பாருங்கள் !!!

எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா
அதை புத்திக்கு எட்டும் படி சொல்லப்போறேன் கேளய்யா
இக்கட ரா ரா ரா ராமையா
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா

என்று தொடங்கும் அந்த பாடல், பின் வரும் 8, 8 ஆக வாழ்க்கையை பிரிக்கும் விஷயங்களை உள்ளடக்கியது....வாழ்க்கையை மிக சுருக்கமாகவும், எளிமையாகவும் விளக்கிய பாடல் “ரா ரா ரா ராமய்யா, எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா” என்ற பாடல்.

முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
இரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல

மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல
நான்காம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல

ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல
ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல

ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமல்ல
எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்ல

வாழ்க்கையை அனுபவித்து பாருங்கள் !!!

Tuesday, November 15, 2011

எங்கே தவறு நடந்தது?..

வாழ்க்கை எதற்கு?.. மிக சந்தோஷமாக வாழணும் என்று இல்லாவிட்டாலும் ஓரளவு திருப்தியாக வாழணும்..

எப்படி.?.. ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் அளவோடு வைத்துக்கொண்டோமானால்..ஆனால் என்ன ஆகியுள்ளது?.. அளவுகோள்களே மாறிவிட்டது...ஆசை பேராசையாக மாறியதை அறியவில்லை..எதிர்பார்ப்புகள் திணிப்புகளாக மாறியதையும் அறியவில்லை..

ஆனால் எங்கே தவறு நடந்தது?..

அன்பு வைப்பதாக சொல்லி நம்மையறியாமலேயே அடிமைத்தனத்தை புகுத்துவதை நாமே அறிவதில்லைதான் சில சமயம்.. சுற்றமும் சூழலும் , நமக்கு அப்படி அமைகிறது.,.மெடிக்கலோ , பொறியியலோ படித்தால்தான் வாழ்க்கை இனிமையாக அமையும் என எண்ண வைக்கப்படுகிறோம்..இப்படி விழுந்து விழுந்து படிக்கும் குழந்தைகள் முகத்தில் மகிழ்ச்சியை பார்த்துள்ளீர்களா.?எல்லாத்துக்கும் டியூஷன், அல்லது சிறப்பு வகுப்புகள் என நேர இடைவெளி இல்லாமல் படும்பாடு..

இதில் பெற்றோர் இருவருமே வேலைக்கு செல்வதால் அன்பா ஆதரவா உட்கார்ந்து பேசி குழந்தைகளிடம் மனம் திறந்து பேசக்கூட நேரமில்லை..இந்த வேகமான உலகில்..அதோடு நம் விருப்பப்படி பாடம் எடுத்து படிக்கும்போது வேண்டா வெறுப்பாகவும், பெற்றோரை எதிர்த்து பேச முடியாத மன அழுத்தமும்..

மொத்தத்தில் நம் பெருமைக்காக குழந்தைகளை ஒரு முதலீடாக ஆக்கிக்கொண்டு வருகிறோம்..

படிக்கவேண்டிய வயதில் படிக்கணும்தான்.. மறுப்பில்லை.. ஆனால் அதுவே திணிப்பாக இருந்திடக்கூடாது..இதில் மட்டுமல்ல , மத திணிப்பும், கலாச்சார திணிப்பும், இன்னும் பலவித பழக்கவழக்க திணிப்பையுமே நாம் செய்கிறோம் சிந்திக்க விடாமல்..இத்தகைய குழந்தைகள் வெளியில் பாசம் கிடைத்தால் அதையே காதல் என நினைத்து தவறிவிட வாய்ப்புகள் அதிகம்..வருகிற சினிமா எல்லாமே காதலைத்தான் சொல்கிறது.. தொலைக்காட்சியிலும் அதே..

பருவ வயது வந்ததும் காதல் வயப்படலாம் என நாம் அறியாததா?.. அதை மறைத்துத்தான் வைக்க இயலுமா?

அடிமைகளாக வளர்க்கப்படும் குழந்தைகள் , தனக்கான மரியாதையும் அங்கீகாரமும் வெளியே கிடைக்கும் பட்சத்தில் அதையே பெரிதாக எண்ணுவதில்லை வியப்பில்லை..இதேதான் திருமணம் தாண்டிய உறவுகளிலுமே காண்கிறோம்..அடிமைத்தனமும், அதிகாரமும் இருக்குமிடமெல்லாம் இதே போல நடைபெற வாய்ப்புண்டு.. இது ஒரு சமூக பிரச்னையாக பார்க்கப்படவேண்டியவிஷயம்..

வாலிப வயது வந்ததுமே பிள்ளைகளைன் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படும்.. எரிச்சல் வரும் ஹார்மோன் மாற்றங்களால். நாம் சொல்வது எதுவுமே பிடிக்காது. நமக்கோ கோபம் வரும்.. நாம் நல்லதுதானே சொல்கிறோம் , இதுவரை நம் பேச்சை கேட்ட பிள்ளை நம்மை மதிக்கலையோ என்ற பயமும் ஈகோவும் நமக்கு..

கொஞ்சம் விட்டுப்பிடிக்கவேண்டிய வயது.. சில குழந்தைகளுக்கு வீட்டை விட்டு தப்பிச்சா போதும் என்ற எண்ணம்.. ( வெளியே போய் பார்த்தால்தான் தெரியும் வீட்டிலுள்ள சுகம் ) .நாம் மட்டுமே வளர்க்கவில்லை குழந்தைகளை. புற சூழலுமே சேர்ந்துதான் அவர்களை நாலாபக்கமும் இழுக்கின்றது..முரண்டு பிடிக்கும்போது விட்டுப்பிடித்தும் கண்டிப்பை கொஞ்சம் பொறுமையாகவும் எடுத்தாள வேண்டும்.

ஆளுமை காரணம்.. குழந்தை எனக்கு சொந்தம் என்ற எண்ணம்.. இது மிக தவறு..என்னதான் நாம் பெற்றாலும் நம் குழந்தை என்றாலும் சொந்தம் கொண்டாடுவதிலும் ஒரு அளவு இருக்கிறது..

Monday, November 14, 2011

நாடி ஜோதிடம் உண்மையா அல்லது பொய்யா???

நாடி ஜோதிடம் உண்மையா அல்லது பொய்யா என்பது இங்கு பிரச்சினை இல்லை.ஆனால் அதை எதுவரைக்கும் நம்பலாம் என்பதுதான் பிரச்சினை. சுருக்கமாக இதுதான் இந்த பதிவின் நோக்கமே ! ஆனாலும் அதற்கு முன் நாடி ஜோதிடம் பற்றி நான் அறிந்த சிலவற்றை பகிர்வது முறையென நினைக்கின்றேன் .

இந்து சமய நம்பிக்கையின் படி ,நாடி ஜோதிடம் சப்த ரிஷிகள் என்று அழைக்கப்படும் வசிஸ்டர் ,அகத்தியர்,கௌசிகர்,வால்மீகி ,போகர் பிருகு,வியாசர் ஆகியோரால் ஓலை சுவடிகளில் எழுதி வைக்கப்பட்டதாம்(ஆனால் அப்பொழுது அவை வாய்மொழி மூலமாகத்தான் சொல்லப்பட்டிருக்கவேண்டும் .பின்புதான் அவை ஓலை சுவடிகளுக்கு மாற்றப்பட்டிருக்கவேண்டும் ஏனெனில் இந்த ஓலை சுவடிகள் 15 ஆம் நூற்றாண்டு காலப்பகுதிக்கு முன்னைய காலப்பகுதியை சேர்ந்தவை ) .இவற்றில் இந்த உலகத்தில் பிறக்கின்ற ஒவ்வொருவரின் வாழ்க்கை பற்றிய ரகசியங்களை உள்ளடக்கப்பட்டுள்ளதாம் . ஆரம்ப காலங்களில் தமிழ் நாடு தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் இவை கண்டெடுக்கப்பட்டன (இந்த நூலகம் ஆசியாவில் மிகப் பழமையான நூலகங்களில் ஒன்றாகும்).பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் இந்த ஓலைச் சுவடிகள் மருத்துவ தேவைகளுககவும் வேறு இன்ன பிற தேவைகளுக்காகவும் ஆங்கிலேயரால் அழிக்கப்பட்டன. இன்னும் சில ஏலங்களில் விடப்பட்டன .இவற்றில் சில தஞ்சாவூர் வைத்தீஸ்வரன் கோவிலை சேர்ந்த பரம்பரை பரம்பரையாக ஜோதிடம் பார்ப்பதை தொழிலாக கொண்டவர்களால் மீட்கப்பட்டன .அவை பின்பு அவர்களால் வாசிக்கபட்டன .பின்பு அவர்களுடைய பின்வந்த சந்ததிகளுக்கும் போதிக்கப்பட்டன .சிலர் இந்த ஏடுகள் அழிந்து போகா வண்ணம் பிரதி எடுத்துகொண்டனர் .இன்று நாங்கள் பார்க்கும் இந்த நாடி ஜோதிடர்கள் எல்லோரும் இந்த சந்ததி வழி வந்தவர்கள் தான் . உண்மையில் இந்த ஒலைகளில் எழுதப்பட்ட ரகசியங்களை யாவும் வட்டெழுத்து(தமிழ் மொழியின் ஆரம்பகால எழுத்துக்கள் ) என்று அழைக்கப்படும் எழுத்துக்களால் எழுதப்பட்டிருக்கின்றதாகவும் அதுவும் பாடல் முறையில் எழுதப்பட்டிருக்கின்றதாகவும் இந்த நாடி ஜோதிடர்கள் கூறுகின்றார்கள் .சிலர் நம்பிக்கைக்குரிய ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு இந்த ஓலையை காட்டுவதாகவும் கேள்விப்பட்டிருக்கின்றேன் .ஒரு சில ஓலைகள் சாதாரண மனிதர்களால்(தமிழர்கள் ) கூட வாசிக்ககூடியதாக இருக்கின்றதாம் .ஒரு மனிதனுடைய கை பெருவிரல் சுவடு 108 வகையான கோடுகளால் ஆனதாம்.இதன் அடிப்படையில் இந்த ஏடுகள் வகைப்படுத்தபட்டிருக்கின்றதாம்.நாடி ஜோதிடர்கள் என்னிடம் இருந்து பெறப்படும் சுவட்டிட்கு பொருத்தமான ஓலைகளை முதலில் தெரிந்து எடுத்துக்கொள்வார்கள் . பின்பு ஒரு சில கேள்விகளை கேட்பதன் மூலம் ஓலையை தெரிந்து எடுத்துக்கொள்வார்களாம் .பின்பு அதில் கூறப்பட்டுள்ள விஷயங்களை இன்றைய தமிழ் மொழியில் வாசித்து சொல்வார்களாம் .இப்படிதான் நாடி ஜோதிடம் பார்க்கப்படுகின்றது .

இந்த நாடி ஜோதிடம் விஷயம் பற்றிய புதிராகவும் புரிந்து கொள்ளமுடியாது இருப்பதும் உண்மைதான் .நாடி ஜோதிடம் மட்டுமல்ல இந்து சமயத்தின் பல விஷயம்இப்படித்தான் .இவை எல்லாம் ஆராய்ச்சி மூலம் அறிந்து கொள்ள மிகக்கடினமானவை அல்லது அறிய முடியாதவை.விஞ்ஞான ஆராய்ச்சி மூலம் நிருபிக்கபடாத கொள்கைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது போன்று உலகத்தில் உள்ள எல்லா மதங்களிலும் கூறப்பட்டுள்ள விஷயம் கொள்கைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன அல்லது ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் .காரணம் இந்த நம்பிக்கைகள் எல்லாம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக முன்னோர்க்களால் சொல்லப்பட்டது .இவற்றை புறந்தள்ளுவது என்பது கடினமானது ஒன்று .

நடைமுறை வாழ்வு என்பது விதியின் அடிப்படையில் வாழ வேண்டியது!இங்குதான் ஒவ்வொருவருடைய நம்பிக்கையும் வேறுபடுகின்றது .ஒருவருடைய நம்பிக்கை மூட நம்பிக்கை ஆவதும் இங்குதான் ! நம் மதத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து விஷயங்களை எந்த வித ஆராய்ச்சியும் இல்லாமல் அப்படியே உள்வாங்கிக்கொண்டு அதன்படி வாழ முற்படும் போதுதான் அந்த நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகள் ஆகின்றன .நான் சில நாட்களுக்கு முன் நாடி ஜோதிடம் பார்த்தேன் அது என்னுடைய நம்பிக்கை.ஆனால் அதில் சொல்லப்படுவது போன்று நான் என்னுடைய வாழ்கையில் மாற்றங்களை செய்யப்போவதில்லை .அப்படி நான் செயய்தேனானால் என்னுடைய நம்பிக்கை மூட நம்பிக்கையாக மாறிவிடும்.என்னைப்பொறுத்தவரை நிகழ்கால வாழ்வுதான்(Present Life) உண்மையான ஒன்று .எதிர்கால திட்டமிடல் எல்லாம் நிகழ்கால வாழ்வு (Present Life) மூலம் தான் கொண்டு செல்லப்படவேண்டும் .நான் இங்கு சொல்வது திட்டமிடலைத்தான் .அதன் படி நடைமுறை வாழ்வில் நடந்து கொண்டால் எதிர்காலம் நாம் நினைத்த மாதிரி அமையும் .அதை விட்டு இந்த ஜோதிடம் போன்றனவற்றை பார்த்து விட்டு ,ஐயோ என்னுடைய வாழ்க்கை இப்படி போகப்போகிறதே என்று புலம்புவதை அறியாமை என்றுதான் என்னால் கூறமுடியும் !கண் முன்னாக இருப்பதை விடுத்துவிட்டு எதிர்காலத்தை அறியவிரும்புவதில் எந்தவித அர்த்தமும் இல்லை என்பது தான் உண்மை.இல்லை என்னுடைய மூட நம்மபிக்கையை மாற்றமாட்டேன் என்பவர்களுக்கு மீதமிருப்பது வாழ்கையை பற்றிய பயம் தான் ! இப்படி கண்மூடித்தனமாக நம்புபவர்கள் முன்வைக்கும் வாதம் இதுதான் "ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது போல் இவருக்கு நடந்திருக்கிறது இது போல் பலருக்கும் நடந்திருக்கின்றது ஆகவே ஜோதிடத்தில் சொல்வது உண்மைதான் அதன் போல் நாமும் நடக்கவேண்டும்".ஆனால் உண்மையில் அவர்கள் ஜோதிடத்தை பார்க்காமல் விட்டிருந்தாலும் அதுதான் நடந்திருக்கும் .அதை ஜோதிடத்தின் மூலம் அல்ல வேறு எந்த நம்பிக்கைகளாலும் மாத்தமுடியாது என்பது உண்மை.

பொதுவாக மத நம்பிக்கைகளை கேள்வி கேட்பவர்கள் மீது போடப்படும் ஒரு சொல் "நாத்திகர்" .ஆனால் நான் நார்த்திகன் அல்ல ,நான் ஒரு "ஆர்த்திகன்"!ஆர்த்திகர் எல்லாம் பகுத்தறிவை மூட்டை கட்டி வைக்கவேண்டும் என்று இல்லை ,பகுத்தறிந்து பார்க்க கூடியவற்றை பகுத்தறிந்து பார்க்கவேண்டும் .மீதியை நம்புவதில் எந்தவித தப்பும் இல்லை . ஆனால் பகுத்தறிந்து பார்க்க கூடிய எல்லையை எப்போதும் விரிவுபடுத்தவேண்டும்.அப்படி விரிவுபடுத்தும் போது மீதியாக நாம் நம்பும் விஷயம் பகுத்தறியப்பட வேண்டி வந்தால் கூட தயங்காமல் சிந்திக்கவேண்டும் ,மாற்றத்தை உண்டு பண்ணவேண்டும் .அப்போதுதான் சுற்றி ஒரு ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும் !அதே போன்று நமபிக்கைகள் விஞ்ஞான ரீதியாக நிருபிக்கப்படும்போதும் அதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் , அது நாடி ஜோதிடமாக இருந்தாலும் கூட !


காண்டம் வாசித்தல் என்று அழைக்கப்படும் நாடி ஜோதிடம் ! இதை நம்புபவர்கள் பலர், நம்பாதவர்கள் சிலர்.சிலர் என்னைப்போன்றவர்கள். நான் எப்படி என்றால் எதையும் அளவுக்கதிகமாக நம்பாதவள் . இதைப்பற்றி நான் சிறிது அறிந்திருந்த போதிலும் இதை ஆராயும் அளவிற்கு நான் போகவில்லை.சிறிது நாட்களுக்கு முன் நானும் மதுரையைச் சேர்ந்த ஒரு பிரபல நாடி ஜோதிடம் பார்க்கும் நிலையத்தில் எனது காண்டத்தையும் பார்க்க சென்றேன்.முதலில் இடது பெருவிரல் சுவட்டை எடுத்து கொண்டார்கள் .சிறிது நேரம் காத்திருக்க சொல்லிவிட்டு பின்பு நியமனம் ( appointment)ஒதுக்கி தந்தார்கள் .

ஆனால் ஏனோ நான் காத்திராமல் கிளம்பி விட்டேன் ...

பொக்கிஷம் !!!

என் பெரும்பான்மையான குழந்தைப் பருவ இரவுகள் பாட்டி சொன்ன கதைகளுடன் முடிந்தன. ஒரு நாள் நான் எழுந்துவிட்டேன்..பாட்டி படுத்தேஇருந்தார்... என் கைமீது விரல்கள் விரிந்தனபாட்டியின் உயிரும் பிரிந்தது.இன்றுதான் எனக்குப் புரிகிறது அன்று பாட்டி எனக்குத் தந்தது பரம்பரைப் பெருமையும் பந்தபாசமும்தான் என்று. என் பாட்டி சொன்ன கதைகளை விலைமதிப்பற்ற பொக்கிஷமாக மதிக்கேறன்..எனக்கு மிக மிக பிடித்த கதை இது தான்..இதை எல்லாம் நான் இங்கு எழுதுவதற்கு காரணம் ஒன்று தான்..நாளை வரும் காலத்தில் என் மகன் அவன் பூர்விகத்தை மறக்க கூடாது ...

இந்தியாவின் வடக்கே ஒரு ஊரில் ஒருவனுடைய தாய் தந்தை ஆகிய இருவருக்கும் கண்கள் தெரியாது. அவனுடைய பெயர் ராமன். ராமன் சிறு வயதில் இருந்து தன் பெற்றோர்க்கு தேவையான (உணவு,உடை) போன்ற அனைத்தையும் பூர்த்தி செய்த்து அவர்களது மனம் நோகாமல் நடத்து வந்தான். அது மட்டும் அல்லாமல் அவன் வசித்து வந்த வீடு புண்ணிய நதியான கங்கைக்கு அருகில் உள்ளது. நாள் தோறும் கங்கையில் நீராடப் பல ஞானிகள், ரிஷிகள் நடத்து யாத்திரை செல்வதுண்டு. இவன் யாத்திரை வருபவர்களுக்கு தங்க இடமும் உண்ண உணவும் கொடுத்து வந்தான்...

ஒரு நாள் யாத்திரையாக வந்த மூன்று ரிஷிகள் ராமன் வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வந்தனர். அவர்களுக்கு உணவு தயார் செய்து சாப்பிட அழைத்தான். சாப்பிட வந்தவர்கள் ராமா நீ பலத் தடவை கங்கையில் நீராடி இருக்கிறாயா என்று கேட்டனர். அதற்கு ராமன் நான் எனது பெற்றோர்களுக்கு தேவையானப் பல வேலைகளை முடிக்கவே நேரம் சரியாக இருக்கிறது ஆகையால் நான் இது வரைக்கும் கங்கையைப் பார்த்தது கூட இல்லை என்றான். மிகவும் கோபம் கொண்ட ரிஷிகள் உலகத்தின் பலப் பகுதிகளில் இருந்து கங்கையைப் பார்க்க வருகின்றனர் நீ கங்கை அருகில் இருத்தும் செல்லவில்லை என்றால் நீ எவ்வளவு பாவம் செய்தவனாக இருக்க வேண்டும் உன் வீட்டில் சாப்பிடுவது பாவம் என்று ராமன் வீட்டில் சாப்பிடாமல் யாத்திரை சென்றுவிட்டனர். ராமனுக்கு மிகவும் வருத்தம். கங்கையின் பாதையைத் தேடிப்போன ரிஷிகள் சென்று கொண்டே இருந்தனர் கங்கையை காணவில்லை. மிகவும் வருத்தத்துடன் வந்து கொண்டிருத்த ரிஷிகள் கங்கை ராமன் வீட்டின் வெளியேப் பாய்வதை கண்டனர். என்ன அதிசயம் என்று பார்க்க ஒரு சப்தம் மட்டும் கேட்டது.

எவன் ஒருவன் தாய் தந்தையருக்கு தேவையானவற்றை கொடுத்து மனம் நோகாமல் வைத்திருக்கனோ அவன் தினம் தினம் கங்கையில் குளித்தற்கு சமம். ஆக தினம் தினம் பாவத்தை கழுவி புண்ணியத்தை அடைந்தவன். ஆகையால் இந்த உலகத்தில் தாய் தந்தையருக்கு நிகரான கடவுள் உலகில் இல்லை. தாய் தந்தையாரை கவனிக்காமல் எந்த கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தாலும் என்ன தானம் செய்தாலும் புண்ணியம் கிடைக்காது.

என் தந்தை இதை என் பாட்டி இறக்கும் வரை பின்பற்றினார்.....

பயனுள்ள பதிவு...

நம் முன்னோர்களின் வாக்குபடி "உடல் வளர்தேன்னே உயிர் வளர்தேன்னே" என்ற திருமூலர் வாக்கு உண்மை. நம் உடலில் கடிகாரம் போல் காலை 03.00 மணி முதல் இரவு 02.59 வரை இரண்டு மணிநேரத்துக்கு ஒரு உடல் உறுப்பு இயங்குவதாக இந்தியா (சித்தா,ஆயுர்வேதம்) மற்றும் சீன மருத்துவ முறைகள் கூறுகின்றன ...... அதை இங்கு பார்ப்போம் .....

காலை 03.00 மணி முதல் 05.00 வரை: நுரையீரல்
புவி ஈர்ப்பு விசை மிகவும் குறைவு (மனம் மிகவும் அமைதியாக இருக்கும்) ஆகையால் தியானம், இறை வழிபாடு, குழந்தைகள் படிப்புக்கு ஏற்ற நேரம்.
குறிப்பு : இந்த நேரத்தில் ஆஸ்துமா உள்ளவர்கள் துங்க முடியாது. இவர்கள் சரியாக 03.00 மணிக்கு எழுந்து 05.00 மணிவரை இரும்மல் தொல்லியல் அவதியுறுவர்.

அதி காலை 05.00 மணி முதல் 07.00 வரை: பெருங்குடல்
இந்த நேரத்தில் காலை கடன் செய்யவேண்டும்.

காலை 07.00 மணி முதல் 09.00 வரை :இரைப்பை
இந்த நேரத்தில் காலை உணவை முடித்து இருக்க வேண்டும்.

காலை 09.00 மணி முதல் 11.00 வரை: மண்ணீரல்
நாம் சாப்பிட்ட உணவை மற்ற உறுப்புகளுக்கு பிரித்து கொடுக்கும் நேரம். இந்த வேலை நடந்தால் தான் சுறுசுறுப்பாக இருக்க முடியும். தடைப்பட்டால் அன்று முழுவது சோம்பலாக இருப்பதை உணரலாம். ஆகையால் ......
குறிப்பு : இந்த நேரத்தில் அமுதம் (சாகாவரம் கொடுக்கும் உணவு) கொடுத்தாலும் உண்ண கூடாது என்றனர் நம் முன்னோர்கள். ஆகையால் இந்த நேரத்தில் தண்ணீர் கூட குடிக்கக்கூடாதென்று சொன்னார்கள்.

பகல் 11.00 மணி முதல் 01.00 வரை: இதயம்
இந்த நேரத்தில் தூங்க கூடாது.
குறிப்பு : இந்த நேரத்தில் தூங்கினால் இதய சம்பந்தப் பிரச்சனைகள் வரும்.

மதியம் 01.00 மணி முதல் 03.00 வரை: சிறுகுடல்
இந்த நேரத்தில் மதிய உணவை முடித்திருக்க வேண்டும்.

மாலை 03.00 மணி முதல் 05.00 வரை: சிறுநீரகப்பை
இந்த நேரத்தில் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். ஜலம் கழிக்கவேண்டும்.
குறிப்பு : தினமும் ஏதாவது பழரசம் குடிக்க நினைத்தால் இந்த நேரத்தில் அதை குடிக்க வேண்டும். அதன் பலன் 100% உடம்பில் சேரும்.

மாலை 05.00 மணி முதல் 07.00 வரை: சிறுநீரகம்
குழந்தைகளை விளையாடவும் அல்லது நடைப் பயிற்சி செய்யவும் சிறந்த நேரம். நம் வேர்வை வெளியேற வேண்டும் .

இரவு 07.00 மணி முதல் 09.00 வரை: இருதய உறை
இரவு உணவு சாப்பிடலாம், தியானம் செய்யலாம்.
குறிப்பு : இந்த நேரத்தில் பாலோ, பால் சார்ந்த உணவுகளும் சாப்பிட கூடாது.

இரவு 09.00 மணி முதல் 11.00 வரை: நாளமில்லா சுரப்பிகள்
ஆறுதல் தேடும் நேரம், அறிவுரைகளை ஏற்கும் நேரம் ஆகையால் குழந்தைகளுக்கு அறிவுரை கூற நினைத்தால் இந்த நேரத்தில் கூறினால் குழந்தைகள் (பெரியவர்களும்) கேட்பார்கள்.

இரவு 11.00 மணி முதல் 01.00 வரை: பித்தப்பை
இந்த நேரத்தில் அழ்ந்தத் தூக்கம் தேவை.
குறிப்பு : தூங்கவில்லை என்றால் அழகு, அறிவு, பலம் குறையும்.

இரவு 01.00 மணி முதல் 03.00 வரை: கல்லீரல்
இந்த நேரத்தில் அழ்ந்தத் தூக்கம் தேவை.

உடல் நலம் பெற உடற்பயிற்சி
மனநலம் பெற தியானப் பயிற்சி

உடல்+ உயிர் = மனம்

மனம் சரியாக இயங்கினால் எந்த ஒரு செயலிலும் வெற்றி உறுதி.

Sunday, November 13, 2011

தனித்தீவாய் நான்....



விடிகாலையில்
சூரிய உதயம் பார்த்து
வருடங்களாயிற்று.

மொட்டை மாடியில்
நட்சத்திரதோடு விளையாடி
சில மாதங்களாயிற்று.

நண்பர்களோடு
அரட்டையடித்து
சில வாரங்களாயிற்று.

அவசர அவசரமாய் இயங்கி
தானாய் புலம்பி
தனித்தீவாய்
மாறிக்கொண்டிருக்கிறேன்.

பாவம் நான்
எனக்காய் இரக்கப்படுங்கள்.

கொஞ்சம் கொஞ்சமாய்
நரக வாசியாய்
மன்னிக்கவும்
நகரவாசியாய்
மாறிக்கொண்டிருக்கிறேன்.

Saturday, November 12, 2011

நான் ரசித்ததும் படித்ததும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம்.

அலுவலகம் செல்லும் ஒரு பெண்ணின் அவசர தாலாட்டு தான் கவியரசு வைரமுத்து சொல்லும் இந்த கவிதை.

இந்த அவசர நுற்றாண்டில் இருதயம் துடிக்கும் இயந்திரங்களாய் மாறிவிட்டது. மனிதன் நெருப்பில் உட்கார்ந்து கொண்டு வயலின் வாசிக்கிறான். குழந்தைக்கு முத்தம் தபாலில் வருகிறது. காதலிக்கு வாங்கிய மல்லிகை பூ டீசல் புகையில் கருபாகிவிடுகிறது. இப்படி நிறம் மாறும் ஒரு வாழ்க்கையில் தாய் பாடும் ஒரு தாலாட்டு மட்டும் தடம் மாறிபோகாமல் இருக்குமா என்ன? எனவே தான் ஒரு குழந்தைக்கு முன்னிரவில் பாட பட வேண்டிய தாலாட்டு முற்பகலில் பாடும் தாலாட்டாய் முகம் மாறிவிடுகிறது..

ஆனால், பொருளாதார விடுதலை கூட கூட சில புதிய விலங்குகளை பூட்டியிருந்தது என்று இனம் கண்டு கொண்டவள் இந்த நுற்றாண்டு பெண். சிறகு இருந்தும் பறக்க முடியவில்லை என்று விமியவன் வீட்டுக்குள் இருந்த பெண்.

பறப்பதற்கு இரண்டு சிறகுகள் போதவில்லை என்று விசுபுகிறவள் வேலைக்கு போகிற பெண்.

வேலைக்கு போகும் நெருப்பு நிமிடங்களில் அன்னை ஒருத்தி பாடும் அவசர தாலாட்டு இது.

சோலைக்கு பிறந்தவளே!
சுத்தமுள்ள தாமரையே!
வேலைக்கு போகின்றேன் - வெண்ணிலவே கண்ணுறங்கு!

அலுவலகம் விட்டு -
அம்மா வரும் வரைக்கும் -
கேசட்டில் தாலாட்டு - கேட்டபடி கண்ணுறங்கு!

ஒரு மணிக்கு ஒரு பாடல்
ஒளிபரப்பும் வானொலியில்
விளம்பரங்கள் மத்தியில் - விழி சாத்தி நீயுறங்கு!

9 மணி ஆனால் உன் அப்பா சொந்தமில்லை -
9:30 மணி ஆனால் உன் அம்மா சொந்தமில்லை -
ஆயவும் தொலைக்காட்சியும் அசதியில் தூங்கிவிட்டால் -
தூக்கத்தை தவிர துணைக்கு வர யாருமில்லை!

20-ம் நூற்றாண்டில் என் கருவில் வந்தவளே!
இது தான் கதியென்று - இன்னமுதே கண்ணுறங்கு!

தூரத்தில் இருந்தாலும் தூயவளே -
உன் தொட்டில் ஓரத்தில் -
என் நினைவு - ஓடிவரும் கண்ணுறங்கு!

பேருந்தில் நசுங்கி, பிதுங்கி போகிற வேளையிலும்
எடை கொஞ்சம் இழந்து இறங்குகின்ற வேளையிலும்
பூப்பூவாய் உனது புகம் புறப்பட்டு வரும் கண்ணே!

தந்தை வந்து கொஞ்சுவதாய் -
தங்க மடியில் தூங்குவதாய் -
கண்ணனே கண்மணியே - கனவு கண்டு - நீயுறங்கு!

புட்டிபால் குறையவில்லை -
பொம்மைக்கும் பஞ்சமில்லை -
தாய்ப்பாலும் தாயும் இன்றி -
தங்க மகனுக்கு என்ன குறை?

மாலையிலே ஓடி வந்து
மல்லிகையே உன்னை அணைத்தால்
சுரக்காத மார்பும் சுரக்குமடி- கண்ணுறங்கு!

தாயென்று காட்டுவதற்கும்
தாவி எடுப்பதற்கும்
ஞாயிற்றுகிழமை வரும் - நல்லவளே கண்ணுறங்கு!